பாராளுமன்ற வளாகத்தில் உருவானது ‘ஹொரு கோ கம’ – மாணவர்கள் அதிரடி

Date:

பல்கலை மாணவர்கள் அதிரடி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நள்ளிரவு ‘ஹொரு கோ கம’ என்ற பெயரிலான மாதிரிக் கிராமம் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியை அண்மித்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று மாலை அரசுக்கு எதிரான பேரணி முன்னெடுக்கப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

மேலும், நேற்று அதிகாலை முதல் நாடாளுமன்ற வளாகத்தை அண்மித்த வீதிகள் முழுமையாக மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில், இன்றைய ஆர்ப்பாட்டத்தின்போது, பொலிஸாரால் அமைக்கப்பட்ட இரும்புக் கம்பிகளுடனான வீதித் தடைகளை பல்கலைக்கழக மாணவர்கள் உடைத்தெறிந்திருந்தனர்.

இவ்வாறான பின்னணியில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நள்ளிரவு ‘ஹொரு கோ கம’ என்ற பெயரிலான மாதிரிக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கையில் 50 பேரில் ஒருவருக்கு போதைப்பழக்கம்

இலங்கையில் 50 பேரில் ஒருவர் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக மகளிர், சிறார்...

இலங்கையில் 12 மில்லியன் மக்கள் வரி செலுத்துவதாக தகவல்

இலங்கையில் இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வரி செலுத்துவோர் அடையாள...

சுரேஷ் சாலேவுக்கு திடீர் மாரடைப்பு

முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சாலே திடீர் மாரடைப்பு...

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையில் 20 கிலோ அரிசி!!

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையின் கீழ் 20 கிலோ அரிசி...