Saturday, July 27, 2024

Latest Posts

பதவி விலகல் குறித்து திங்களன்று மஹிந்த விசேட அறிவிப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைச்சரவை அமைச்சர்கள் குழுவும் ஆதரவளித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பிரதமர் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோரினால் பதவி விலக தயார் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.