மின்சாரக் கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்க வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
2023ஆம் ஆண்டுக்கான இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள மின்சாரத் தேவை தரவுகள் உண்மையான தேவையை விட மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடு என்பதை தாங்கள் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனக ரத்நாயக்க கூறுகிறார்.
அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் இலங்கை மின்சார சபையினால் பெப்ரவரி மாதம் அமுல்படுத்தப்பட்ட 66 வீத மின்சாரக் கட்டணமானது தவறான முடிவு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனக ரத்நாயக்க கூறுகிறார்.