திருகோணமலையில் பதற்றம்! மஹிந்த குடும்பத்துடன் அங்குதான் உள்ளாராம்.!

Date:

திருகோணமலையில் உள்ள கடற்படை முகாம் பொது மக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை பாதுகாப்புத் தரப்பினரால் அலரி மாளிகை அருகில் இருந்து போராட்டக்காரர்களை அகற்றிய பின்பு மஹிந்த அலரிமாளிகையில் இருந்து தனது விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

அதன் பிறகு இன்று அதிகாலை இருள் விலக முன்னரே விமானப்படை ஹெலிகொப்டர் ஒன்றில் மஹிந்த, ஷிரந்தி, மஹிந்தவின் இரண்டாம் புதல்வன் யோஷித்த அவனது மனைவி மற்றும் இன்னும் சிலரும் திருகோணமலைக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

திருகோணமலை கடற்படை முகாமில் இருக்கும் கடற்படைத் தளபதிக்கான விருந்தினர் மாளிகையில் தற்போது அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாடு ஒன்றின் ஒத்துழைப்புடன் இன்னும் ஒரு நாட்டில் தஞ்சம் அடைவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி...

நிமல் லான்சாவுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில்...

தம்மிக்க பெரேராவின் மேலும் ஒரு வியாபார விருத்தி

இலங்கையின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான தம்மிக்க பெரேரா, தனது வணிக வலையமைப்பில்...