திருகோணமலையில் உள்ள கடற்படை முகாம் பொது மக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை பாதுகாப்புத் தரப்பினரால் அலரி மாளிகை அருகில் இருந்து போராட்டக்காரர்களை அகற்றிய பின்பு மஹிந்த அலரிமாளிகையில் இருந்து தனது விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
அதன் பிறகு இன்று அதிகாலை இருள் விலக முன்னரே விமானப்படை ஹெலிகொப்டர் ஒன்றில் மஹிந்த, ஷிரந்தி, மஹிந்தவின் இரண்டாம் புதல்வன் யோஷித்த அவனது மனைவி மற்றும் இன்னும் சிலரும் திருகோணமலைக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.
திருகோணமலை கடற்படை முகாமில் இருக்கும் கடற்படைத் தளபதிக்கான விருந்தினர் மாளிகையில் தற்போது அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாடு ஒன்றின் ஒத்துழைப்புடன் இன்னும் ஒரு நாட்டில் தஞ்சம் அடைவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.


