சமூக ஊடக செயல்பாட்டாளர் பியத் நிகேஷலாவை சந்தித்த எதிர்கட்சித் தலைவர்!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்னவுடன் தலங்கமவில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலாவை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேரில் சென்று சந்தித்துள்ளார்.

சமூக ஊடக செயல்பாட்டாளர்களான நிகேஷலா மற்றும் அபேரத்ன ஆகிய இருவரும் முறையே கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் முல்லேரியா வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பியத் நிகேஷலாவை சஜித் பிரேமதாச இன்று வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டார்.

”ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல்வாதிகள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் நடந்து கொள்ள அனுமதிக்கப்படுது வருத்தமளிப்பதாக” சஜித் பிரேமதாச இதன்போது ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SJB தேசிய பட்டியல் எம்பி பதவி விலகல்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து...

29ஆம் திகதிவரை அவதானமாக இருக்கவும்

நாட்டின் பெரும்பாலான நில மற்றும் கடல் பகுதிகளில் நீடிக்கும் கடுமையான வானிலையைக்...

அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு

சீரற்ற வானிலை காரணமாக அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கரையோர...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய...