ஆட்சியை பிடித்த உடனேயே அனைத்தையும் மாற்றிவிட முடியாது

Date:

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பொருளாதாரம் நல்ல நிலைக்கு வருவதற்கு சில காலம் எடுக்கும் என கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் பொருளாதார குழு உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி கூறுகிறார்.

“நாங்கள் ஒரு அரசாங்கத்தை எடுத்து ஒரே இரவில் பொருளாதாரத்தை மாற்ற முடியாது. இதுபோன்ற பொய்யான வாக்குறுதியை நாம் அளிக்க வேண்டிய அவசியமில்லை. தோழர் அநுரவிடம் இப்போது நான் ஜனாதிபதி, அதனால்தான் நான் ஆறு அல்லது ஏழு மாதங்கள் ரணில் போல் இருப்பேன், சிறிது காலம் கோட்டாபாயவைப் போல் செய்துவிட்டு, அநுர திஸாநாயக்கவைப் போல் செய்வேன் என்று சொல்ல முடியுமா?

பொருளாதாரத்தை மாற்றுவதற்கு நியாயமான கால அவகாசம் தேவைப்படும். ஆனால் 24 மணி நேரமும் அரசியல் மாறப்போவதில்லை” அண்மையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சுனில் ஹந்துன்நெத்தி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றில் சுனில் ஹந்துன்நெத்தி நிதியமைச்சராக நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ராஜித பிணையில் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்...

இரண்டு கொள்கலன்கள் நாட்டுக்குள் வந்தது எப்படி?

பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்...

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி...