ஆட்சியை பிடித்த உடனேயே அனைத்தையும் மாற்றிவிட முடியாது

Date:

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பொருளாதாரம் நல்ல நிலைக்கு வருவதற்கு சில காலம் எடுக்கும் என கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் பொருளாதார குழு உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி கூறுகிறார்.

“நாங்கள் ஒரு அரசாங்கத்தை எடுத்து ஒரே இரவில் பொருளாதாரத்தை மாற்ற முடியாது. இதுபோன்ற பொய்யான வாக்குறுதியை நாம் அளிக்க வேண்டிய அவசியமில்லை. தோழர் அநுரவிடம் இப்போது நான் ஜனாதிபதி, அதனால்தான் நான் ஆறு அல்லது ஏழு மாதங்கள் ரணில் போல் இருப்பேன், சிறிது காலம் கோட்டாபாயவைப் போல் செய்துவிட்டு, அநுர திஸாநாயக்கவைப் போல் செய்வேன் என்று சொல்ல முடியுமா?

பொருளாதாரத்தை மாற்றுவதற்கு நியாயமான கால அவகாசம் தேவைப்படும். ஆனால் 24 மணி நேரமும் அரசியல் மாறப்போவதில்லை” அண்மையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சுனில் ஹந்துன்நெத்தி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றில் சுனில் ஹந்துன்நெத்தி நிதியமைச்சராக நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது

சொக்கா மல்லி என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

புதிய அமைச்சர்!

எரிசக்தி அமைச்சராக கலாநிதி அருண கருணாதிலக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...

நிலக்கரி மோசடி பொய்! எதிர்கட்சிக்கு தோல்வி

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் எந்தவிதமான நிலக்கரி மோசடியும்...

JVPயின் முழுநேர தொண்டர்கள் ராஜிதவிடம் புலம்பல்

தற்போதைய அரசாங்கத்தின் முன்னணி அமைச்சர்கள் குறித்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன...