Friday, May 17, 2024

Latest Posts

மேல் மாகாணஅனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று பூட்டு ஏனைய மாகாண பாடசாலைகள் வழமை

இன்று காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் பாடசாலைகளை வழமை போன்று நடத்துமாறு அனைத்து அரச பாடசாலை அதிபர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதன்படி, இன்றய தினம் பாடசாலைகளை நடத்துவது குறித்த தீர்மானம் அரச பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று மூடப்படவுள்ளன.

இதேவேளை, நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக பொது போக்குவரத்தை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக உள்ளதாகவும், அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதால் பாடசாலை பாட காலங்களை நிர்வகிக்க முடியாதுள்ளதாகவும் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, பள்ளி நேரத்தை மாற்றி அமைக்க பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.