எம்பிக்களுக்கான வாகன அனுமதிப் பத்திரம் வழங்க எதிர்ப்பு!

Date:

இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் அதிகாரம் மற்றும் சிவில் அமைப்புக்கள் மற்றும் பிரஜைகளின் ஒன்றியம் இணைந்து இன்று (15) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த அமைப்பு எழுத்து மூலம் கடிதம் எழுதியிருந்தது.

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சபாநாயகரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருந்தது.

அதற்கு எதிராக இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

எவ்வாறாயினும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து குறித்த நோட்டீசை பெற்ற பொலிஸார், அதனை ஜனாதிபதி செயலகத்திற்கு எடுத்துச் சென்றதையடுத்து, போராட்டக்காரர்கள் பொலிஸாருடன் இணைந்து ஜனாதிபதி செயலகத்தில் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

புகைப்படங்கள் – அஜித் செனவிரத்ன

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய வானிலை

நாடு முழுவதும் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

பாரிய அளவு நிதி அனுப்பும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள்

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதியம் இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து கிட்டத்தட்ட...

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...