செந்தில் தொண்டமானுக்கு ஆளுநர் அரியாசனம் உறுதி!

Date:

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் ஊவா மாகாண முன்னாள் அமைச்சரும் ஊவா மாகாணத்தின் முன்னாள் பதில் முதலமைச்சருமான முத்துவிநாயகம் செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாளை 17ம் திகதி மூன்று புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அதில் கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்படுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதிக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வடக்கு மாகாண ஆளுநராக அரசு நிர்வாக சேவையில் உள்ள தமிழ் பெண்மணி ஒருவரும் வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் ஒருவரும் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அது தொடர்பான உறுதியான தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பரீட்சை திகதிகள் அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு இடம்பெறவுள்ள பரீட்சைகள் குறித்து கல்வி...

பலாங்கொடையில் காட்டுத் தீ

பலாங்கொடை நொன்பெரியலில் உள்ள நெக்ராக் வத்த அருகே உள்ள கோம்மொல்லி பாலத்துடு...

நேபாள் அரசுக்கு நேர்ந்த கதி NPP அரசுக்கும்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறுகையில், தற்போதைய தேசிய...

பஸ்களை அலங்கரிக்கத் தடை

பஸ்களை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட...