செந்தில் தொண்டமானுக்கு ஆளுநர் அரியாசனம் உறுதி!

Date:

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் ஊவா மாகாண முன்னாள் அமைச்சரும் ஊவா மாகாணத்தின் முன்னாள் பதில் முதலமைச்சருமான முத்துவிநாயகம் செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாளை 17ம் திகதி மூன்று புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அதில் கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்படுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதிக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வடக்கு மாகாண ஆளுநராக அரசு நிர்வாக சேவையில் உள்ள தமிழ் பெண்மணி ஒருவரும் வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் ஒருவரும் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அது தொடர்பான உறுதியான தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...