அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை எரித்துக் கொலை செய்வதாக மிரட்டல்

Date:

நேற்று (15) பிற்பகல் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை கொலை செய்யப் போவதாக ராஜாங்க அமைச்சர் அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் தேர்தலில் அமைச்சரை நிற்க விடமாட்டோம் என்றும், தங்களிடம் ஆயுதம் இருப்பதாகவும், இந்த அச்சுறுத்தலை உதாசீனப்படுத்தினால் எரித்துக்கொலை செய்வோம் என்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் மிரட்டியதாக கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அச்சுறுத்தல் விடுத்த நபரின் தொலைபேசி இலக்கத்தின் விபரங்களை அறிய பொலிஸார் நீதிமன்ற அனுமதியைப் பெறவுள்ளதாகவும், இது பழைய கொலைக் கலாசாரத்தின் புதிய ஆரம்பமாக இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

தனது அரசியல் பயணத்தை சீர்குலைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

போராட்டத்தின் பெயரால் தனது வீடுகள் எரிக்கப்பட்ட போதும் தனது அரசியல் கொள்கைக்காக அஞ்சாமல் நின்ற தனது அரசியல் பயணத்தை இவ்வாறான கோழைத்தனமான செயற்பாடுகளினால் மாற்ற முடியாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...

கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொலை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை 16வது லேன் பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கிச்...

வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்...

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...