அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை எரித்துக் கொலை செய்வதாக மிரட்டல்

Date:

நேற்று (15) பிற்பகல் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை கொலை செய்யப் போவதாக ராஜாங்க அமைச்சர் அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் தேர்தலில் அமைச்சரை நிற்க விடமாட்டோம் என்றும், தங்களிடம் ஆயுதம் இருப்பதாகவும், இந்த அச்சுறுத்தலை உதாசீனப்படுத்தினால் எரித்துக்கொலை செய்வோம் என்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் மிரட்டியதாக கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அச்சுறுத்தல் விடுத்த நபரின் தொலைபேசி இலக்கத்தின் விபரங்களை அறிய பொலிஸார் நீதிமன்ற அனுமதியைப் பெறவுள்ளதாகவும், இது பழைய கொலைக் கலாசாரத்தின் புதிய ஆரம்பமாக இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

தனது அரசியல் பயணத்தை சீர்குலைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

போராட்டத்தின் பெயரால் தனது வீடுகள் எரிக்கப்பட்ட போதும் தனது அரசியல் கொள்கைக்காக அஞ்சாமல் நின்ற தனது அரசியல் பயணத்தை இவ்வாறான கோழைத்தனமான செயற்பாடுகளினால் மாற்ற முடியாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...