மேலும் ஒரு வர்த்தகர் சுட்டுக்கொலை!

0
170

சிறிய வியாபாரியான 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் பதவியாவின் மஹாசென்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு வந்த சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பதவியா பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் மகாசென்புர பகுதியைச் சேர்ந்த சம்பத் (38) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

தேங்காய் எண்ணெய் வியாபாரம் செய்து வரும் இவர் இரவில் வீட்டில் இருந்த போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த மூவர் T56 துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக காவல்துறை கூறுகிறது.

இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் 119 க்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றதுடன் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here