எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாச, ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவிடம் ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.
இணைய சேனல் மூலம் தன்னை அவமதிக்கும் வகையில் சமுதிதவால் விவாதம் நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
சமுதித சமரவிக்கிரம தன்னிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் இல்லை என்றால் 14 நாட்களுக்குள் ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு வழங்கவும் இல்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜலனி பிரேமதாச தெரிவித்துள்ளார்.