கெஸ்பேவயில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் தடை

Date:

கெஸ்பேவயில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பொல்கசோவிட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருள் பௌசர் ஒன்று கெஸ்பேவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எரிபொருள் இறக்கும் சம்பவம் அண்மையில் பதிவாகியுள்ளது. விசாரணையை அடுத்து, கெஸ்பேவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கெஸ்பேவ எரிபொருள் நிரப்பு நிலையத்தின் நிர்வாகம் மறு அறிவித்தல் வரையில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இருந்து எரிபொருளை வெளியிட மாட்டோம் என நிரூபித்துள்ளது.

நாசவேலைகள் இடம்பெற்றால் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முக்கிய பிரமுகர்கள் அரசாங்கத்தில் இணையும் வாய்ப்பு?

இலங்கை கிரிக்கெட் மாற்றுக் குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏரான்...

பல்கலைக்கழக விண்ணப்ப திகதி நீடிப்பு

2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப்...

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக மனு

எதிர்க்கட்சியின் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி...

37 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.  சட்டவிரோதச்...