சீனா , இந்தியாவிடம் இருந்து மேலும் ஒரு பில்லியன் டாலர் கடன்

Date:

டாலர் நெருக்கடியை சமாளிக்க மேலும் ஒரு பில்லியன் டாலர்கள் கடன் கிடைக்கும் என அரசாங்கம் நம்புகிறது.

தற்போது அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி கூட ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் இருந்து எரிபொருள் இறக்குமதிக்கு இன்னும் 200 மில்லியன் டாலர்கள் மட்டுமே பாக்கி உள்ளது. அந்த அளவு தீர்ந்துவிட்டால், எரிபொருள் இறக்குமதியும் நின்றுவிடும்.

எனவே, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக சீனா மற்றும் இந்தியாவிடம் இருந்து தலா 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை கொள்வனவு செய்யுமாறு பொது திறைசேரி விடுத்த கோரிக்கை தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, உலகின் பல நாடுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய மறுத்துள்ளன அல்லது கட்டுப்படுத்தியுள்ளன. இது ரஷ்யாவிலிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது மற்றும் இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளில் பெரும்பாலானவற்றை ரஷ்யாவிலிருந்து வழங்குகிறது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியானது

2025 க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk...

ICC தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு

சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக,...

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...