செப்டம்பர் 15ம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை

0
224

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மே மாதம் 27 ஆம் திகதி முதல் ஜூன் 14 ஆம் திகதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்கும் கடைசி திகதி நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here