அதிசொகுசு வாகனங்கள் இறக்குமதிக்கு 5 வருட தடை

Date:

பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிசொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதை 5 வருடங்களுக்கு நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிதியமைச்சின் கீழ் உள்ள பல வரி ஒழுங்குமுறை சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் இணைந்துகொண்டார்.

அங்கு மேலும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

“மோட்டார் வாகனங்கள் மீதான வரி பற்றி நான் பேச விரும்புகிறேன். இது சொகுசு வாகனங்களுக்கான வரியை அதிகரிப்பது பற்றியது. சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதை 4 முதல் 5 ஆண்டுகளுக்கு முழுமையாக நிறுத்துமாறு அரசை கேட்டுக் கொள்கிறேன். இந்த நாட்டுக்கு சொகுசு கார்கள் தேவையில்லை. இந்நாட்டின் பொருளாதாரத்தின் படி இருக்கும் வாகனங்களே போதும். எனவே சொகுசு வாகனங்கள் இல்லாமல் குறைந்தது 5 வருடமாவது இந்த நாட்டை இயக்குங்கள். ஏனெனில் சொகுசு வாகனங்களுக்குச் செல்லும் அந்நியச் செலாவணி மிகப் பெரியது. அதன் காரணமாக, நமது வெளிநாட்டு சொத்துக்கள் குறைவதற்கு முக்கிய காரணம் சொகுசு வாகனங்கள்தான்” என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....