கொலை செய்யப்பட்ட ராஜகுமாரிக்கு நீதிக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் – படங்கள் இணைப்பு

Date:

திரைப்பட கலைஞர், கோடீஸ்வர வர்த்தகர் சுதர்மா நெத்திகுமார வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த நிலையில் கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்த பதுளை ராஜகுமாரிக்கு நீதிக் கோரி கொழும்பில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

R. ராஜகுமாரியின் கொலையாளிகளை வெளிப்படுத்து! விசாரணையை விரைவுபடுத்துங்கள்! ஆர்.ராஜகுமாரிக்கு நீதி!வீட்டுப் பணியாளர்கள் தொடர்பான சட்டத்தை அமுலாக்கு போன்ற பதாகைகளுடன் இன்று (24) பிற்பகல் கொழும்பு அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக மௌனப் போராட்டமொன்று இடம்பெற்றது.

கடந்த 11ஆம் திகதி தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பில் வெலிக்கடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் ஆர்.ராஜகுமாரி என்ற பெண் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளின் போது ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் நடத்திய தாக்குதலில் இவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. பணிபுரிந்த வீட்டிலும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த தேர்தலுக்கு முன் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சிறையில்

அடுத்த தேர்தல் நடைபெறும் நேரத்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைத்து அரசியல்வாதிகளும் சிறையில்...

சீனி ஊழல் முடிவுக்கு வந்தது

2020 ஒக்டோபரில் சீனி மீதான ஐம்பது ரூபாய் வரியை 25 சதங்களாக...

யாழ் மாநகரின் முதல்வராக மதிவதனி தெரிவு

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று...

நாமல் – சஜித் அணி இணைந்து பிடித்த ஆட்சி

உடபத்தாவ பிரதேச சபையில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று (ஜூன்...