ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அரசாங்கத்திற்கு நிபந்தனைகளுடன் ஆதரவை வழங்க முடிவு !

Date:

நிபந்தனைகளுக்கு உட்பட்டு அரசாங்கத்தில் பங்குகொள்ள சமகி ஜன பலவேகய (SJB) செயற்குழு நேற்று தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன நேற்று தெரிவித்தார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கு ஜனாதிபதி இணங்கினால், அரசாங்கத்தில் பங்குகொள்ள நாங்கள் தயார் என்ற தீர்மானத்தை செயற்குழு உறுதிப்படுத்தியது என எம்.பி. எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

“எரிவாயு, எரிபொருள், மருந்துகள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு உதவுமாறு நட்பு நாடுகளுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். லஞ்சம் மற்றும் ஊழலை குறைக்கவும், திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கும் சட்டத்தை கொண்டு வருவோம்,” என்றார்.

மேலும், கட்சியின் தீர்மானங்களை மீறி அமைச்சுக்களை பொறுப்பேற்ற ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரிடம் விசாரணை நடத்த செயற்குழு தீர்மானித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திருமலை சம்பவத்துக்கு திருமா கண்டனம்!

கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? சிங்கள...

நடக்கவே முடியாத வயதிலும் களத்துக்கு வருகிறார் மஹிந்த!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் எதிர்வரும் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள்...

இந்திய ஜார்கண்ட் மாநில மாநாட்டில் இதொகா தலைவர், ஶ்ரீதரன் எம்பி பங்கேற்பு

இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் இதொகா...

தங்காலையில் இருவர் சுட்டுக் கொலை

தங்காலை, உனகுருவாவில் உள்ள கபுஹேன சந்திப்பில் நேற்று மாலை 6.55 மணியளவில்...