அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்: மேல்,வடமேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களில் பதிவு

Date:

மேல்,வடமேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களில் ஏனைய மாகாணங்களை விட அதிகளவில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகி வருவதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவித்தார்.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பல சம்பவங்கள் இடம்பெற்றாலும் அவற்றுக்கான முறைப்பாடுகள் கிடைப்பது குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சிறுவர்களை புறக்கணிப்பது தொடர்பில் இவ்வாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையில் 872 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக ஆணையத்தின் தலைவர் தெரிவித்தார்.

குறித்த காலப்பகுதிக்குள், சிறுவர்களை கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் 632 புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுவர்களை அடிமைகளாக பயன்படுத்தியமை தொடர்பில் 50 முறைப்பாடுகள், சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்பாத குற்றச்சாட்டு தொடர்பில் 499 முறைப்பாடுகள் இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையில் கிடைக்கப்பெற்றுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...