அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்: மேல்,வடமேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களில் பதிவு

Date:

மேல்,வடமேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களில் ஏனைய மாகாணங்களை விட அதிகளவில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகி வருவதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவித்தார்.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பல சம்பவங்கள் இடம்பெற்றாலும் அவற்றுக்கான முறைப்பாடுகள் கிடைப்பது குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சிறுவர்களை புறக்கணிப்பது தொடர்பில் இவ்வாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையில் 872 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக ஆணையத்தின் தலைவர் தெரிவித்தார்.

குறித்த காலப்பகுதிக்குள், சிறுவர்களை கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் 632 புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுவர்களை அடிமைகளாக பயன்படுத்தியமை தொடர்பில் 50 முறைப்பாடுகள், சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்பாத குற்றச்சாட்டு தொடர்பில் 499 முறைப்பாடுகள் இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையில் கிடைக்கப்பெற்றுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை நிலக்கரி நிறுவன அலுவலகத்திற்கு பூட்டு

2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி...

அதிகார மோகத்தில் NPP தரப்பு கலவரம்!

மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரத்தை முறையான தேர்தல் இன்றி கைப்பற்ற...

BYD ATTO 1 தொடர்பிலும் சிக்கல்

ஜான் கீல்ஸ் CG ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் BYD ATTO...

மஹிந்தவின் சொத்து விபரம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமது சொத்துகள் மற்றும் கடன்கள் தொடர்பான...