கொழும்பை சுற்றிவளைக்கத் தயாராகும் அநுர அணி

Date:

ஜூன் 09 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைத்து 3 மாதங்களாகிறது. அதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியானது ஜூன் 08 ஆம் திகதி மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தி உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தமது கட்சியின் வேட்பாளர்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 08ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் செல்லவுள்ளதாகவும் அதன் பின்னர் ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம் மற்றும் கம்பஹா ஆகிய இடங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போராட்டங்களின் பின்னர் கொழும்பை முற்றுகையிட்டு பாரிய போராட்டத்தை முன்னெடுக்க தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பலபிட்டிய பிரதேசத்தில் நேற்று (27) நடைபெற்ற தொகுதி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...