கொழும்பை சுற்றிவளைக்கத் தயாராகும் அநுர அணி

Date:

ஜூன் 09 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைத்து 3 மாதங்களாகிறது. அதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியானது ஜூன் 08 ஆம் திகதி மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தி உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தமது கட்சியின் வேட்பாளர்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 08ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் செல்லவுள்ளதாகவும் அதன் பின்னர் ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம் மற்றும் கம்பஹா ஆகிய இடங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போராட்டங்களின் பின்னர் கொழும்பை முற்றுகையிட்டு பாரிய போராட்டத்தை முன்னெடுக்க தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பலபிட்டிய பிரதேசத்தில் நேற்று (27) நடைபெற்ற தொகுதி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

என்னை கைது செய்ய வேண்டாம்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச்...

கொலை வழக்குகளில் சிக்கும் பிள்ளையான்!

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் சுட்டு ஐந்து...

2026 முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5.1% வளர்ச்சி

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி...

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...