கொழும்பை சுற்றிவளைக்கத் தயாராகும் அநுர அணி

Date:

ஜூன் 09 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைத்து 3 மாதங்களாகிறது. அதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியானது ஜூன் 08 ஆம் திகதி மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தி உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தமது கட்சியின் வேட்பாளர்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 08ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் செல்லவுள்ளதாகவும் அதன் பின்னர் ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம் மற்றும் கம்பஹா ஆகிய இடங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போராட்டங்களின் பின்னர் கொழும்பை முற்றுகையிட்டு பாரிய போராட்டத்தை முன்னெடுக்க தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பலபிட்டிய பிரதேசத்தில் நேற்று (27) நடைபெற்ற தொகுதி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...