ரங்கே பண்டாரவின் கருத்து தொடர்பில் நவீன் பதிலளிப்பு

0
221

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தது போன்று தேர்தலை ஒத்திவைப்பதற்கான மக்கள் வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பில் கட்சிக்குள் எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் தி தக்கஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

“அரசியலமைப்புச் சட்டத்தின்படி தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்று நினைக்கிறேன். எனவே ஜனாதிபதித் தேர்தல் முதலில் வருகிறது என்று கட்சிக்குள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எனவே அது முதலில் வரும் என்று நினைக்கிறேன். பொதுவாக்கெடுப்பு ஏற்புடையது என்று நான் நினைக்கவில்லை. தேர்தலை தள்ளிப்போடுவது நல்லதல்ல, கட்சிக்கும் நல்லதல்ல. இது குறித்து எங்கள் கட்சிக்குள் பேசவே இல்லை. இது தொடர்பாக உள் விவாதம் எதுவும் நடைபெறவில்லை. எனவே ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்” என்றார்.

இரத்தினபுரி பிரதேசத்தில் நேற்று (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நவின் திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here