ரங்கே பண்டாரவின் கருத்து தொடர்பில் நவீன் பதிலளிப்பு

Date:

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தது போன்று தேர்தலை ஒத்திவைப்பதற்கான மக்கள் வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பில் கட்சிக்குள் எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் தி தக்கஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

“அரசியலமைப்புச் சட்டத்தின்படி தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்று நினைக்கிறேன். எனவே ஜனாதிபதித் தேர்தல் முதலில் வருகிறது என்று கட்சிக்குள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எனவே அது முதலில் வரும் என்று நினைக்கிறேன். பொதுவாக்கெடுப்பு ஏற்புடையது என்று நான் நினைக்கவில்லை. தேர்தலை தள்ளிப்போடுவது நல்லதல்ல, கட்சிக்கும் நல்லதல்ல. இது குறித்து எங்கள் கட்சிக்குள் பேசவே இல்லை. இது தொடர்பாக உள் விவாதம் எதுவும் நடைபெறவில்லை. எனவே ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்” என்றார்.

இரத்தினபுரி பிரதேசத்தில் நேற்று (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நவின் திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியின் நிலை

கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன்...

ரணிலை இன்று நீதிமன்றில் முன்னிலைபடுத்துவது சிரமம்

கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன்...

கொழும்பில் சிறப்பு பாதுகாப்பு

கொழும்பில் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை முன்னிட்டு, பொது ஒழுங்கை பேணவும் எந்தவொரு...

ரணில் தொடர்பான சர்ச்சை இன்றுடன் முடிவு!

இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ்...