வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காமம் விகாரையின் எசல உற்சவத்தை முன்னிட்டு கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அனைத்து மதுபானசாலைகளும் 16 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜூன் 19ஆம் திகதி முதல் ஜூலை 4ஆம் திகதி வரை அந்தப் பகுதியில் உள்ள மதுக்கடைகள் மூடப்படும்.
மேலும், திருவிழாக் காலங்களில், திருவிழா நடக்கும் இடத்தை தடை வலயமாக மாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், கதிர்காமம் கோவில் எசல திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் வெளியில் இருந்து மதுபானம் கொண்டு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.