அரசாங்கம் முன்மொழிந்துள்ள புதிய ஒலிபரப்பு அதிகாரசபை சட்டத்துக்கு ஹர்ஷ டி சில்வா எதிர்ப்பு

Date:

அரசாங்கத்தின் உத்தேச ஒலிபரப்பு அதிகார சபைச் சட்டம் மோசமானதாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

வெகுஜன ஊடகங்களை முன்னேற்றுவதற்கான ஒரு முயற்சியென கூறப்படும் இந்தச் சட்டம், உண்மையில் அரசாங்கம் தனது சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப ஊடகங்களை ஒடுக்குவதற்கு கையாளும் ஒரு கருவியாக பயன்படுத்த முற்படுகிறது.

முன்மொழியப்பட்ட ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமூலத்தில் அரசாங்கத்தின் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகாத ஊடகங்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கவும் கட்டுப்படுத்தவும் வழிவகைகள் உள்ளன. இத்தகைய நடவடிக்கைகள், ஜனநாயக சமூகத்தின் கொள்கைகளுடன் அடிப்படையில் பொருந்தாதவை என்றும் அவர் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று (14) ஆம் திகதி தினசரி...

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...