அரசாங்கம் முன்மொழிந்துள்ள புதிய ஒலிபரப்பு அதிகாரசபை சட்டத்துக்கு ஹர்ஷ டி சில்வா எதிர்ப்பு

Date:

அரசாங்கத்தின் உத்தேச ஒலிபரப்பு அதிகார சபைச் சட்டம் மோசமானதாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

வெகுஜன ஊடகங்களை முன்னேற்றுவதற்கான ஒரு முயற்சியென கூறப்படும் இந்தச் சட்டம், உண்மையில் அரசாங்கம் தனது சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப ஊடகங்களை ஒடுக்குவதற்கு கையாளும் ஒரு கருவியாக பயன்படுத்த முற்படுகிறது.

முன்மொழியப்பட்ட ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமூலத்தில் அரசாங்கத்தின் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகாத ஊடகங்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கவும் கட்டுப்படுத்தவும் வழிவகைகள் உள்ளன. இத்தகைய நடவடிக்கைகள், ஜனநாயக சமூகத்தின் கொள்கைகளுடன் அடிப்படையில் பொருந்தாதவை என்றும் அவர் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....