ISIS முக்கிய சந்தேகநபர் கொழும்பில் கைது

Date:

ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான உஸ்மான் புஷ்பராஜ் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கைது செய்யப்பட்டவர்களை இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அழைத்துச் சென்றவர் இந்த சந்தேகநபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உஸ்மான் புஷ்பராஜின் இரண்டு இளைய சகோதரர்கள் அண்மையில் பங்கதெனிய பிரதேசத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் எனக் கூறி நான்கு இலங்கையர்கள் குஜராத் மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

சமீபத்தில் உஸ்மான் புஷ்பராஜை கைது செய்ய பொதுமக்களின் ஆதரவை பொலீசார் நாடினர். அவரை பற்றி தகவல் அளிப்பவருக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என பொலீசார் தெரிவித்திருந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மனுஷவுக்கு பிணை!

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு...

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம்...

இஷாரா உட்பட ஐந்து பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

மின் கட்டணம் அதிகரிக்காது

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...