ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழு கூட்டம் இன்று

Date:

நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று (02) விசேட மத்திய குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

கொழும்பு டாலி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதுடன், மத்திய குழு உறுப்பினர்கள் தவிர அனைத்து தொகுதி அமைப்பாளர்களையும் கலந்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொருளாளரும் இராஜாங்க அமைச்சருமான லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம் எதிர்வரும் 8ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளதாகவும், இன்று நடைபெறும் மத்திய குழுக் கூட்டத்தில் அது குறித்து ஆராயப்படும் எனவும் அழகியவண்ண மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நீதிமன்ற உத்தரவு காரணமாக தலைவர் பதவியை இழந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்றைய மத்திய குழு கூட்டம் சட்டபூர்வமானது அல்ல என தெரிவித்துள்ளார்.

கட்சியின் சிறுபான்மையினரால் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய குழு கூட்டத்தை அழைப்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...

ஹூணுபிட்டி ரயில் விபத்தில் 12 பயணிகள் காயம்

இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் மார்க்கத்தில்...