ஊடகவியலாளர் பிரகீத் வழக்கில் பிணையில் வௌியே வந்த சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

Date:

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு பிணை வழங்கப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின் 09 பேரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று உத்தரவிட்டது.

சஞ்சீவ மொராயஸ் , தமித் தொடவத்த , மஹேன் வீரமன் உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கில் சாட்சி வழங்குவதற்காக மன்றில் ஆஜராகியுள்ள சுமதிபால சுரேஷ் எனும் சாட்சியாளர், இதற்கு முன்னர் சாட்சி வழங்குவதற்காக மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை என்பதுடன், பின்னர் அவரை கைது செய்வதற்காக நீதிமன்றத்தினூடாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும மன்றில் சுட்டிக்காட்டினார்.

சாட்சியாளருக்கு அழுத்தம் விடுக்கப்படுவதால், அது தொடர்பில் விசாரணையொன்றை நடத்த கட்டளையிடுமாறு சட்டத்தரணி மன்றில் கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கில் சாட்சியாளர்களுக்கு அழுத்தம் விடுக்கப்படுகின்றமை தமக்கும் விளங்குவதால், விடயம் தொடர்பில் நீதிமன்றம் கவனம் செலுத்த வேண்டும் என மனுதாரர் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மன்றில் சுட்டிக்காட்டினார்.

அதன் பின்னர் சாட்சிகள் விசாரிக்கப்பட்டதையடுத்து, மேலதிக வழக்கு விசாரணை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசபந்து தென்னகோன் கைது

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி)...

நீதித்துறை கடுமையாக பாதிப்பு

நீதித்துறை சேவை ஆணையத்தால் செய்யப்பட்ட பல இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் காரணமாக...

இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு

தாய்லாந்து அமைச்சரவை 10,000 இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. எல்லை...

துசித ஹல்லோலுவ கைது

தேசிய லாட்டரி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், முன்னாள் ஜனாதிபதி ரணில்...