ஆளும் கட்சி கூட்டத்தில் மோதல், ஒரு ராஜபக்ஷ வைத்தியசாலையில்

Date:

நேற்று (03) பிற்பகல் இடம்பெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கண்டி மாவட்ட அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான குணதிலக்க ராஜபக்ஷ மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம தலையிட்டு சம்பவத்தை சமரசம் செய்த போதிலும், கூட்டம் முடிவடைந்து வெளியேறிய போது குணதிலக்க ராஜபக்ஷவுக்கும் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கும் மீண்டும் மாடிப்படியில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, மகிந்தானந்த அளுத்கமகே தள்ளுமுள்ளு செல்லும்போது, மாடிப்படியில் இருந்து குணதிலக்க ராஜபக்ஷ எம்.பி.கீழே விழுந்ததில் காயமடைந்து இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இது தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே, தனக்கும், குணதிலக்க ராஜபக்ஷவுக்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றதாகவும், ஆனால், அவரையும், சம்பவத்தில் தலையிட்ட ஜகத் சமரவிக்ரமவையும் தள்ள முயற்சிக்கவில்லை எனவும் குணதிலக ராஜபக்ஷவை அந்த இடத்திலிருந்து அழைத்துச் செல்ல முற்பட்ட போது கீழே விழுந்தார் எனவும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது...

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...

வெனிசுவேலா நிலநடுக்கம் – பலர் பலி

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள்...

அஸ்வெசும நலத்திட்டத்தில் மாற்றம்

இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும்...