ரோயல் பார்க்கில் இவோன் ஜொன்சன் எனும் யுவதியை கொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் சமந்த ஜயமஹவிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பு அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வழக்கின் தீர்ப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை பரிசீலித்த உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.
2005ஆம் ஆண்டு ரோயல் பார்க் சொகுசு தொடர்மாடி குடியிருப்பில் இவோன் ஜொன்சன் எனும் 19 வயது யுவதியை கொலை செய்தமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட ஜூட் சமந்த ஜயமஹவிற்கு 2012ஆம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
எனினும், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டார்.