Saturday, July 27, 2024

Latest Posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டணி பணிகள் துரிதம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஜூன் 8 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு அம்பாந்தோட்டை நகர மையத்தில் நடைபெறவுள்ள மக்கள் கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவின் ஏற்பாட்டில் இந்த மக்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய கூட்டணியின் ஆரம்பத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து புதிய கூட்டணி வேலைத்திட்டம் வலுப்பெற்றுள்ளதாகவும், எதிர்காலத்தில் ஏனைய கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளை இணைத்து பாரிய விரிவான கூட்டணியொன்று உருவாக்கப்படும் எனவும் நிமல் லான்சா குறிப்பிடுகின்றார்.

நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, துமிந்த திஸாநாயக்க, சுசில் பிரேம்ஜயந்த, நளின் பெர்னாண்டோ, அனுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் லான்சா, பிரியங்கர ஜயரத்ன, உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி பிரதிநிதிகள் மற்றும் சிவில் ஆர்வலர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.