நதாஷா எதிரிசூரியவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Date:

நகைச்சுவை நடிகை நதாஷா எதிரிசூரிய மற்றும் ‘SL VLOG’ யூடியூப் சேனலின் உரிமையாளர் புருனோ திவாகர ஆகியோரை எதிர்வரும் ஜூன் 21 வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகை நதாஷாவின் சமீபத்திய சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள குற்றப் புலனாய்வுத்துறை கடந்த மே 31 ஆம் திகதி அவரை கைதுசெய்தது. SL VLOG’ உரிமையாளரை அன்றையதினம் குற்றப் புலனாய்வுத்துறை கைதுசெய்தது.

நதாஷா எதிரிசூரிய கடந்த மே 28 அன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நாட்டை விட்டு வெளியேற முயன்றபோதே CID யினர் அவரை கைது செய்தனர்.

கொழும்பில் உள்ள ஒரு முன்னணி பாடசாலை ஒன்றில் சமீபத்தில் நடைபெற்ற ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சியில், பல மதங்களை அவமதித்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...