RM Parks நிறுவனத்துடன் நீண்ட கால ஒப்பந்தம் கைச்சாத்து

Date:

பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி, களஞ்சியப்படுத்தல், விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான நீண்ட கால ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

Shell நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், இணைக்கப்பட்ட RM Parks நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

Shell வர்த்தக நாமத்தின் கீழ் இலங்கை எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கும் நான்காவது நிறுவனமாக RM Parks திகழ்கிறது.

இன்று கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம், இருபது வருடங்களுக்கு இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும் விநியோகிக்கவும் விற்பனை செய்யவும் அந்நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

அத்துடன், பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களூடாக குறித்த வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், மேலும் புதிய 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஸ்தாபிப்பதற்கும் குறித்த நிறுவனத்திற்கு அனுமதி கிடைக்கிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகம்

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) முதல்...

இந்த வரவு செலவு திட்டத்தை தோண்டத் தோண்ட தங்கம் வரும்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்,...

இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை...

இலங்கைக்கு பாம்பு, ஆமை கடத்தும் மர்ம கும்பல்

சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை...