ரவி கருணாநாயக்க விடுத்துள்ள தேர்தல் குறித்த அறிவிப்பு

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சியினால் அமைக்கப்பட்ட தேர்தல் குழுவின் தேசிய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு ரணில் விக்கிரமசிங்கவை வேட்பாளராக நியமிப்போம், அனைத்துக் கட்சிகளின் ஆதரவைப் பயன்படுத்தி பொதுத் தேர்தலிலும் போட்டியிடுவோம் என்றார்.

கேள்வி – அப்படியென்றால் ஜனாதிபதி கண்டிப்பாக போட்டியிடுகிறார் என்று அர்த்தமா?

பதில் – “கண்டிப்பாக”

கேள்வி – பொதுஜன பெரமுனவின் ஆதரவைக் கேட்டீர்களா, பொதுஜன பெரமுனவுடன் கலந்துரையாடியீர்களா?

பதில் – “இல்லை, நாங்கள் இதை எல்லா கட்சிகளுடனும் செய்தோம். அந்தக் கட்சி, இந்தக் கட்சி என அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து செயல்படுகிறோம்’’ என்றார்.

கேள்வி – இந்த பொதுக் கூட்டணி எப்போது வெளிவரும்?

பதில் – “என்னால் தனியாக பதில் சொல்வதை விட நான் என்ன சொல்ல முடியும் என்றால், இதை இன்னும் பத்து பன்னிரெண்டு நாட்களில் நீங்கள் காண்பீர்கள், அதை முன்வைத்து, ஒற்றுமையை உருவாக்கி, நாட்டை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய பதவியைப் பெற்ற பிறகு அவர் நடத்திய முதல் செய்தியாளர் சந்திப்பு அதுவாகும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...