சம்பிக்கவை வளைக்கச் சஜித் அணி பிரயத்தனம்

Date:

குடியரசு முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவை தமது கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முயற்சித்து வருகின்றது.

இதற்கான பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன என்று அறியமுடிகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை வகிக்கும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அக்கட்சியில் இருந்து விரைவில் வெளியேறத் திட்டமிட்டுள்ளார். ராஜித சேனாரத்னவும் ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலேயே உள்ளார்.

இந்நிலையிலேயே, இவ்விருவரின் இடைவெளியை நிரப்பும் வகையிலும், சிங்கள, பௌத்த வாக்கு வங்கியைக் குறிவைத்தும் சம்பிக்க ரணவக்கவுக்கு சஜித் தரப்பு வலைவிரித்துள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பட்டியலின் கீழ்தான் சம்பிக்க ரணவக்க போட்டியிட்டார். அதன்பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறி, புதிய கட்சியை உருவாக்கினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரச வங்கியில் மூன்றரை கோடி திருட்டு

களுத்துறை - ஹொரணை நகரில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய்...

ஹொரணை முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 9 பேர் பலி

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 9 பேரின் உடல்கள்...

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தடை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி...

ஹர்ஷவை ஏமாற்ற நினைத்த அரசாங்கம்!

நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி...