மே 09, 73 பொலிஸார் கடமை தவறியதாக தகவல்

Date:

2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளைத் தடுக்கும் பணியில் 73 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தவறியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி சபையில் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 35 OIC களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் பாதிக்கப்படாத வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அமைச்சர் தெரிவித்த தகவலின்படி, கடமை தவறியதாக அடையாளம் காணப்பட்ட 62 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 6 இன்ஸ்பெக்டர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகள் மீது தாக்குதல்களை நடத்தியவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமித்ராராச்சி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அவர்களுக்கு எதிராக தனியான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

“தாக்குதல் நடத்தியவர்களில் சிலர் விபச்சார விடுதிகளை நடத்துவது போன்ற பிற குற்றங்களைச் செய்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது மற்றும் அவர்கள் மீது தனி விசாரணைகள் நடத்தப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...

இன்று வானிலை

வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வானிலை அவதான...

கல்பிட்டி கடற்கரையில் ஒரு தொகை ஐஸ்

நேற்று (5) இரவு கல்பிட்டி கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகை சோதனை செய்தபோது...

இன்றைய வானிலை

நாடு முழுவதும் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...