ஆறு கோடி பெறுமதியான போதைப் பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

Date:

இன்று (10) காலை கொஸ்கொடவில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, ​​ஆறு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட அதிரடிப் பிரிவு தெரிவித்துள்ளது.

போதைப்பொருளை வைத்திருந்த இரு இளைஞர்களும் கொஸ்கொடவில் வசிப்பவர்கள்.

கொஸ்கொடவில் இருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் அதிக பெறுமதியான போதைப்பொருள் இதுவாகும் என கொஸ்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொஸ்கொட பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியில் பொலிஸாருக்கு நானூறு மீற்றர் தொலைவில் உள்ள வீடொன்றில் இருந்து போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கையிருப்பு மற்றும் அதனை அருகில் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...