ஆறு கோடி பெறுமதியான போதைப் பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

Date:

இன்று (10) காலை கொஸ்கொடவில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, ​​ஆறு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட அதிரடிப் பிரிவு தெரிவித்துள்ளது.

போதைப்பொருளை வைத்திருந்த இரு இளைஞர்களும் கொஸ்கொடவில் வசிப்பவர்கள்.

கொஸ்கொடவில் இருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் அதிக பெறுமதியான போதைப்பொருள் இதுவாகும் என கொஸ்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொஸ்கொட பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியில் பொலிஸாருக்கு நானூறு மீற்றர் தொலைவில் உள்ள வீடொன்றில் இருந்து போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கையிருப்பு மற்றும் அதனை அருகில் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்...

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...