ஆறு கோடி பெறுமதியான போதைப் பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

Date:

இன்று (10) காலை கொஸ்கொடவில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, ​​ஆறு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட அதிரடிப் பிரிவு தெரிவித்துள்ளது.

போதைப்பொருளை வைத்திருந்த இரு இளைஞர்களும் கொஸ்கொடவில் வசிப்பவர்கள்.

கொஸ்கொடவில் இருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் அதிக பெறுமதியான போதைப்பொருள் இதுவாகும் என கொஸ்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொஸ்கொட பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியில் பொலிஸாருக்கு நானூறு மீற்றர் தொலைவில் உள்ள வீடொன்றில் இருந்து போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கையிருப்பு மற்றும் அதனை அருகில் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...

அமெரிக்க இராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவத்தின் AH-64...

இலங்கை மத்திய வங்கி யின் உத்தரவு

இலங்கைக்குள் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து ஏற்றுமதியாளர்களும், தங்களது மாதாந்த வருமானத்தில்...