ஆறு கோடி பெறுமதியான போதைப் பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

Date:

இன்று (10) காலை கொஸ்கொடவில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, ​​ஆறு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட அதிரடிப் பிரிவு தெரிவித்துள்ளது.

போதைப்பொருளை வைத்திருந்த இரு இளைஞர்களும் கொஸ்கொடவில் வசிப்பவர்கள்.

கொஸ்கொடவில் இருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் அதிக பெறுமதியான போதைப்பொருள் இதுவாகும் என கொஸ்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொஸ்கொட பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியில் பொலிஸாருக்கு நானூறு மீற்றர் தொலைவில் உள்ள வீடொன்றில் இருந்து போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கையிருப்பு மற்றும் அதனை அருகில் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...