யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சியுடன் சஜித் விசேட சந்திப்பு!

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையே விசேட சந்திப்பு நடைபெற்றது.

யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (10) இரவு இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா, சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நிர்வாகச் செயலாளர் எஸ்.எக்ஸ். குலநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன மற்றும் அக்கட்சியின் யாழ். மாவட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் ஆதரவைப் பெறும் நோக்குடன் சஜித் பிரேமதாஸ மேற்படி சந்திப்பை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...

ஹூணுபிட்டி ரயில் விபத்தில் 12 பயணிகள் காயம்

இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் மார்க்கத்தில்...

அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று (14) ஆம் திகதி தினசரி...

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...