விஜயதாசவுக்கு எதிரான தடையுத்தவு மேலும் நீடிப்பு

0
139

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு விதித்திருந்த தடையுத்தரவை மேலும் நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி சமரி வீரசூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை நீடிப்பது தொடர்பான கோரிக்கை எதுவும் இல்லை என்பதால், அது நீட்டிக்கப்பட மாட்டாது என்று நீதிபதி குறிப்பிட்டார்.

வழக்கு தொடர்பான பதில்கள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதை ஜூலை 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், ஜூன் 28ஆம் திகதி வரை தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here