சட்ட மா அதிபர் பதவி நீடிப்பு குறித்து இன்று இறுதி முடிவு

Date:

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவையை நீடிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை இன்று (18) மீண்டும் பரிசீலிக்கவுள்ளது.

சஞ்சய் ராஜரத்தினம் தனது 60 வயதை பூர்த்தி செய்யும் போது ஜூன் 27 முதல் ஓய்வு பெற உள்ளார். மேலும் அவருக்கு டிசம்பர் 31, 2024 வரை சேவை நீட்டிப்பு வழங்க ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவை இந்த பரிந்துரையை இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் பரிசீலித்த போதிலும் இறுதி முடிவை எட்ட முடியவில்லை.

இதன்படி, அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 02.00 மணிக்கு கூடி பிரேரணையை மீள்பரிசீலனை செய்யவுள்ளது.

இதற்கு முன்னர் இந்த நாட்டின் வரலாற்றில் எந்தவொரு சட்டமா அதிபருக்கும் சேவை நீடிப்பு வழங்கப்படவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...

வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த...

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?

மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா...