சட்ட மா அதிபர் பதவி நீடிப்பு குறித்து இன்று இறுதி முடிவு

Date:

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவையை நீடிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை இன்று (18) மீண்டும் பரிசீலிக்கவுள்ளது.

சஞ்சய் ராஜரத்தினம் தனது 60 வயதை பூர்த்தி செய்யும் போது ஜூன் 27 முதல் ஓய்வு பெற உள்ளார். மேலும் அவருக்கு டிசம்பர் 31, 2024 வரை சேவை நீட்டிப்பு வழங்க ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவை இந்த பரிந்துரையை இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் பரிசீலித்த போதிலும் இறுதி முடிவை எட்ட முடியவில்லை.

இதன்படி, அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 02.00 மணிக்கு கூடி பிரேரணையை மீள்பரிசீலனை செய்யவுள்ளது.

இதற்கு முன்னர் இந்த நாட்டின் வரலாற்றில் எந்தவொரு சட்டமா அதிபருக்கும் சேவை நீடிப்பு வழங்கப்படவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும?

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை நியமிக்க...

28 அரசியல் பிரபலங்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை!

குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, முந்தைய அரசாங்கத்தின்...

மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய தலைவர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி...

நள்ளிரவு முதல் ரயில் வேலைநிறுத்தம்

இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில்...