லொத்தர் சீட்டுக்களின் விலை அதிகரிப்பு

Date:

ஜூலை 6 முதல் லொத்தர் சீட்டு ஒன்றின் விற்பனை விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தேசிய லொத்தர் சபை (NLB) மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை (DLB) தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போதுள்ள லொத்தர் சீட்டுகள் கவர்ச்சிகரமான படங்கள், பரிசுகள் மற்றும் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளுடன் சந்தையில் வெளியிடப்படும் என லொத்தர் சபைகள் தெரிவித்துள்ளன.

இன்று இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய லொத்தர் சபையினர், ஏறக்குறைய 20,000 குடும்பங்கள் தங்களால் பராமரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

விற்பனையாளர்கள் மற்றும் முகவர்கள் உட்பட அனைத்து ஆதரவாளர்களும் நிலைமையை சமாளிப்பதற்கு தங்களின் ஆதரவை வழங்குமாறு இரு லாட்டரி சபைகளின் தலைவர்களும் கேட்டுக்கொண்டனர்.

இதேவேளை, “லக்கி 7” என்ற பெயரில் புதிய லொத்ரும், “ஜெய கிங்” என்ற சூப்பர் ட்ரா லொத்தரும் சிறப்பு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பின் ஆட்சி NPP வசம்

கொழும்பின் புதிய மேயராக NPP-யின் Vraie Cally Balthazar தேர்ந்தெடுக்கப்பட்டதால், பசுமைக்...

அடுத்த தேர்தலுக்கு முன் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சிறையில்

அடுத்த தேர்தல் நடைபெறும் நேரத்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைத்து அரசியல்வாதிகளும் சிறையில்...

சீனி ஊழல் முடிவுக்கு வந்தது

2020 ஒக்டோபரில் சீனி மீதான ஐம்பது ரூபாய் வரியை 25 சதங்களாக...

யாழ் மாநகரின் முதல்வராக மதிவதனி தெரிவு

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று...