ரணிலுடன் செல்ல எனக்கு பைத்தியம் இல்லை!

0
185

எதிர்வரும் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையும் திட்டம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையும் அளவுக்கு தனக்கு பைத்தியம் இல்லை என்று சிறிசேன கூறுகிறார்.

அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யானைச் சின்னத்தில் ரணில் போட்டியிட மாட்டார் எனவும், தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம், எதிர்கால செயற்பாடுகளை தமது கட்சியின் மக்களே தீர்மானிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது, வேறு சின்னத்தில் போட்டியிடுவார் அல்லது எதிர்வரும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here