பொலிஸாரின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவ வழிபாடு

Date:

முல்லைத்தீவு குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொலிஸ் மற்றும் இராணுவப் புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் இன்று சிவவழிபாடு இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் அமைந்துள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் வழிபாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் சிவனை தரிசிப்பதற்காக ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் இன்று காலை 10 மணியளவில் பூசை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த வழிபாட்டில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் யூட்சன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இ.ஜெகதீசன் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டு பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவவழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....