மூழ்கும் கப்பலில் அல்ல ஊசலாடும் கப்பலில் ஏறி உள்ளேன் – தம்மிக்க பெரேரா

Date:

நாட்டில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் தான் நாடாளுமன்றத்திற்கு வந்ததாகவும், தற்போது செய்ய வேண்டியது அப்பிரச்சினைக்கு விடை காண்பதே எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்றத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தனது பங்களிப்பை நிறைவேற்றுவதன் மூலம் சவாலை வெற்றிகொள்ள முடியும் எனவும், தான் ஏறியது மூழ்கும் கப்பலில் அல்ல எனவும் வேகமாக ஊசலாடும் கப்பலில் என்றும் அந்த ஆட்டத்தை தன்னால் நிறுத்த முடியும் எனவும் தம்மிக்க பெரேரா குறிப்பிட்டார்.

யுத்த காலத்தில் முதலீட்டுச் சபையின் தலைவராக தாம் கடமையாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் இந்த நேரத்திலும் நாட்டுக்குத் தேவையான முதலீடுகளை கொண்டு வர முடியும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை

திருகோணமலையில் நேற்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர்...

எரிபொருள் விலை திருத்தம் இல்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை...

ரம்புக்கனையில் மண்சரிவு

ரம்புக்கனை, கங்கைகும்பூர பகுதியில் இன்று (01) பாரிய மண்சரிவு ஒன்று பதிவாகியுள்ளதாக...

அனர்த்த மீட்பு உலங்குவானூர்தி விபத்து

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212...