மூழ்கும் கப்பலில் அல்ல ஊசலாடும் கப்பலில் ஏறி உள்ளேன் – தம்மிக்க பெரேரா

Date:

நாட்டில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் தான் நாடாளுமன்றத்திற்கு வந்ததாகவும், தற்போது செய்ய வேண்டியது அப்பிரச்சினைக்கு விடை காண்பதே எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்றத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தனது பங்களிப்பை நிறைவேற்றுவதன் மூலம் சவாலை வெற்றிகொள்ள முடியும் எனவும், தான் ஏறியது மூழ்கும் கப்பலில் அல்ல எனவும் வேகமாக ஊசலாடும் கப்பலில் என்றும் அந்த ஆட்டத்தை தன்னால் நிறுத்த முடியும் எனவும் தம்மிக்க பெரேரா குறிப்பிட்டார்.

யுத்த காலத்தில் முதலீட்டுச் சபையின் தலைவராக தாம் கடமையாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் இந்த நேரத்திலும் நாட்டுக்குத் தேவையான முதலீடுகளை கொண்டு வர முடியும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...