தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் நீதிமன்றில் சமர்பிக்க உத்தரவு

Date:

ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் வெளியிடப்பட வேண்டிய அனைத்து DNA அறிக்கைகள் மற்றும் தொலைபேசி தரவு பதிவுகளை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அரச மரண விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைகளின் பகுப்பாய்வு நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொலைபேசி மூலம் அறிவித்துள்ள நிலையில், அறிக்கைகளை சமர்பிக்க உத்தரவு பிறப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, உரிய பகுப்பாய்வு அறிக்கைகளை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரச இரசாயன பகுப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்...

அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாய வாக்குமூலம்

விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம்...

மின் கட்டண உயர்வு இன்று தொடக்கம் அமுலில்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத்...