ஜூலை 10க்குப் பிறகு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடையின்றி தொடரும்

Date:

இன்று (27) நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன, இன்று முதல் ஜூலை 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதன்படி, துறைமுகங்கள், சுகாதார சேவைகள், அத்தியாவசிய உணவு விநியோகம் மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்கள் விநியோகம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் விநியோகிக்கப்படும்.

ஜூலை 10க்குப் பிறகு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடையின்றி தொடரும் என்று அமைச்சர் கூறினார்.

தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...