ஜூலை 10க்குப் பிறகு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடையின்றி தொடரும்

Date:

இன்று (27) நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன, இன்று முதல் ஜூலை 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதன்படி, துறைமுகங்கள், சுகாதார சேவைகள், அத்தியாவசிய உணவு விநியோகம் மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்கள் விநியோகம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் விநியோகிக்கப்படும்.

ஜூலை 10க்குப் பிறகு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடையின்றி தொடரும் என்று அமைச்சர் கூறினார்.

தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐக்கிய மக்கள் சக்தி செய்த வரலாற்று பிழை!

அமைச்சர் விஜித ஹேரத்தின் பாராளுமன்ற உரை - 2025.11.14 அரசியல் மற்றும் பொருளாதார...

புப்புரஸ்ஸ பகுதியில் 16 வயது மாணவி படுகொலை!

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ மில்லகாமுல்ல காசல்மில்க் பகுதியில் 16 வயது...

மாகாண சபை குறித்து ஆராய சிறப்புத் தேர்வுக் குழு

மாகாண சபை முறைமை மற்றும் தேர்தல்களை நடத்துவது குறித்து முடிவு செய்வதற்காக...

நாமல் – சுமந்திரன் இடையில் சந்திப்பு

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...