யாழில் வன்முறை, 31 பேர் கைது

Date:

யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி, நீர்வேலி பகுதியில் வீட்டினுள் புகுந்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

25 பெண்களும் 06 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி – நீர்வேலியில் நேற்றிரவு வீடொன்றுக்குள் புகுந்த சிலர், அங்கிருந்த உடைமைகளை சேதப்படுத்திய போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்த போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளார்.

இதேவேளை, தாக்குதலுக்குள்ளான ஏனைய இருவர் காயமடைந்து பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...