பல மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருள் இருப்பு ஒரு சில நாட்களுக்கு மட்டுமே

Date:

பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் கூற்றுப்படி, டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெயைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் பல மின் உற்பத்தி நிலையங்களின் எரிபொருள் இருப்பு ஒரு சில நாட்களுக்கு மட்டுமே போதுமான அளவு குறைந்துள்ளது.

மேற்படி ஆணைக்குழு நேற்று (01) வெளியிட்ட குறிப்பின்படி, சோஜிட்ஸ் ஆலை மற்றும் மாத்தறை ஏஸ் ஆலைக்கு சொந்தமான எரிபொருள் இருப்புக்கள் நேற்றைய தினம் ஏற்கனவே தீர்ந்துவிட்டன.

மேலும் பல மின் உற்பத்தி நிலையங்களில் இன்று எரிபொருள் தீர்ந்து போகவுள்ளதுடன் சபுகஸ்கந்த ஏ, சபுகஸ்கந்த பி மற்றும் பார்ஜ் ஆகியவற்றில் மாத்திரமே இன்னும் மூன்று நாட்களுக்கு போதுமான எரிபொருள் உள்ளது.

நொரோச்சோலை நிலக்கரியில் இயங்கும் அனல்மின்நிலையத்தில் வரும் அக்டோபர் வரை போதுமான நிலக்கரி இருப்பு உள்ளது, ஆனால் ஆலையின் மூன்று ஜெனரேட்டர்களில் ஒன்று அத்தியாவசிய பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளதால், கொள்ளளவு 540 மெகாவாட்டாக குறைந்துள்ளது.

அதன்படி, இன்று ஐஓசி நிறுவனத்திடம் இருந்து டீசல் கையிருப்பு பெற முடிந்தால் மட்டுமே பெரும் மின்வெட்டைத் தவிர்க்க முடியும் என அந்தத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக...

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...