வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு எச்சரிக்கை !-தபால் மா அதிபர்

Date:

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு சமூகமளிக்காவிட்டால், சேவையை விட்டு விலகியதாக கருதி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கு எழுத்து மூலம் இன்று அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக நாடு முழுவதிலும் உள்ள தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களை செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் மாத்திரம் திறப்பதற்கு அண்மையில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக மத்திய தபால் பரிவர்த்தனை மற்றும் வெளிநாட்டுத் துறைகளில் கணிசமான அளவு தபால் பைகள் குவிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...